நாட்டில் 100 நிறுவனங்களில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!
நாட்டின் நிறுவனங்களில் உற்பத்தி திறனை அதிகப்படுத்த பல்வேறு வகையான வழிகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 100 நிறுவனங்களில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
4 நாட்கள் வேலை
இங்கிலாந்து நாட்டில் ஏற்கனவே வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜூன் மாதம் சோதனை அடிப்படையில் 6 மாதங்கள் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சுமார் 3,300 ஊழியர்கள் கலந்து கொண்டு பணியாற்றி வந்தனர். இந்த சோதனையின் முடிவில் இத்திட்டம் தங்களின் வணிகத்திற்கு சாதகமாக இருப்பதாக 88% நிறுவனங்கள் தெரிவித்தனர்.
Exams Daily Mobile App Download
மேலும் 95% நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி திறன் அதிகரித்து இருப்பதாகவும், மற்ற பணிகளில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது இங்கிலாந்தில் 100 நிறுவனங்களில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் சுமார் 2,600 பேர் பணியாற்றுகின்றனர். இத்திட்டத்தால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக பணியாற்றுவதுடன் புதிய பணியாளர்களையும் நியமிக்க முடியும்.
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை – ரூ. 25 லட்சம் வரை .. விண்ணப்பங்கள் வரவேற்பு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த திட்டம் விரைவில் இந்தியாவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒரு புதிய தொழிலாளர் குறியீட்டை அரசு உருவாக்கி வருவதாக தொழிலாளர் செயலாளர் அபூர்வ சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். புதிய தொழிலாளர் குறியீட்டில் வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்பதே வரம்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி 4 நாட்கள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் விரும்பும் வேலை நேரத்தில் பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.