Post Office இல் சேமிக்க நினைப்போர் கவனத்திற்கு – குறைந்தபட்சம் ரூ.100 முதல்! சூப்பர் திட்டங்கள்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், உச்ச வரம்பு, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி பார்க்கலாம்.
தொடர் வைப்பு நிதி திட்டம்
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் அதிகளவு இணைந்து பயன் பெற்று வருகின்றனர். ஏனெனில் இதில் கிடைக்கும் வட்டி தொகையானது வங்கிகளை காட்டிலும் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. அத்துடன் இந்த திட்டங்களில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் செலுத்தி சேமிப்பு கணக்கை தொடங்கலாம் என்பதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட பெருமளவு இணைகின்றனர்.
தமிழக அரசு வழங்கும் விருதுகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதனால் பொது மக்களிடையே அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் உள்ள தொடர் வைப்பு நிதி திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தனியாக அல்லது கூட்டு கணக்கு மூலமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதில் கூட்டு கணக்கில் 3 நபர் வரை சேமிக்க முடியும். இதில் 18 வயதுக்கும் கீழ் உள்ள நபர்கள் மற்றும் மனநல பாதிப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும்.
இதில் கணக்கை தொடங்க குறைந்தபட்சமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். அதன்பின் ஒவ்வொரு மாதமும் 10 ரூபாயில் முதல் செலுத்தலாம். மேலும் இதில் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம். இதில் 4 மாதங்கள் தொடர்ந்து மாத தொகை செலுத்தப்படாமல் இருந்தால் கணக்கு நிறுத்தி வைக்கப்படும். இதையடுத்து இதில் ஆண்டுக்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதன் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்திற்கு சென்று தொடங்கலாம்.