மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

ஹரியானா மாநிலத்தில் இன்று (பிப்.09) முதல் அரசு ஊழியர்கள் அனைவரும் 100 சதவீதம் அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அந்தந்த துறைத் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள்:

இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து. அந்த வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு விதிக்கபட்டு நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு, அரசு ஊழியர்களின் நலன் கருதி 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வந்து பணி புரிய வேண்டும். 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்தது.

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!

தொற்று விரைவாக பரவும் நேரத்தில் அரசு ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவும். தொற்று அறிகுறிகள் உள்ளோர் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கர்ப்பிணிகள் மாற்றுத்திறனாளிகள், நோய் தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் அலுவலகம் வந்து பணி புரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மத்திய அரசு 100% ஊழியர்கள் அலுவலகம் வந்து பணிபுரிய உத்தரவிட்டது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

அதனை தொடர்ந்து தற்போது ஹரியானாவில் இன்று முதல் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவலர்களின் வருகையை அந்தந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். அலுவலகங்களில் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் பிப்ரவரி 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!