தமிழகத்தில் 100% சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது நிலைமை சரியாகி இருப்பதால் சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவை தடுக்க பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் கொரோனா பாதிப்பு குறைய குறைய பொது போக்குவரத்து செயல்பட தொடங்கியது. ஆனால் சென்னையில் கொரோனவால் மக்கள் எண்ணிக்கை பேருந்துகளில் குறைவாக காணப்பட்டது. அதனால் பயணிகளுக்கு ஏற்றார் போல பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதன் பின் கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்நிலையில் பல பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சாதாரணப் பேருந்துகளின் இயக்கம் என்பது உரிய அட்டவணைப்படி இயக்கப்படுவதில்லை என புகார் வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி? நிதியமைச்சகத்தின் விளக்கம்
Exams Daily Mobile App Download
அதில் சென்னையில் தினமும் 3,233 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் தினசரி 30 லட்சம் பயணிகள் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலான பணிமனைகளில் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை எனவும் பல பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. எனவே பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்கவும், சாதாரண பேருந்துகளின் 100 சதவீத இயக்கத்தை உறுதிப்படுத்தவும், கடைசி பேருந்துகள் மற்றும் இரவு பேருந்துகளை NOT RUN இன்றி சரியாக இயக்கவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SCERT?