திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி? மாநில அரசின் முடிவு!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளில் அனுமதி:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு கடந்த ஜூலை மாதம் முதல் குறைந்து வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளை அளித்து வந்தது. இரண்டாம் அலையின் பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் மற்றும் அரசு இரண்டு தரப்பையும் மிகவும் பாதிப்படைய செய்தது. இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து இன்னும் யாரும் மீண்டு வரவில்லை. ஆனால் மருத்துவ நிபுணர்கள் கொரோனா 3ம் அலையின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடுத்து வரும் 100 நாட்களில் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
WhatsApp செயலியில் விரைவில் புதிய அம்சம் அறிமுகம் – பயனர்கள் கவனத்திற்கு!
நாடு முழுவதும் தினசரி 30,000 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பல மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆனால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளில் நீண்ட கோரிக்கையின் விளைவால் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் மீண்டும் செயல்பட பல மாநில அரசுகளும் அனுமதி அளித்தது. ஆனால் இதற்காக பல விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை அடுத்த வாரம் பள்ளிகள் திறப்பு? அரசு திட்டம்!
தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்கள் அரசிடம் இது தொடர்பாக பல முறையை கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் தொற்று பாதிப்பு நிலை சீரடைந்து வருவதையொட்டி வரும் செப்டம்பர் 24ம் தேதி முதல் 100% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்திலும் விரைவில் முழு அளவில் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.