தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 100% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை – ஆணையர் உத்தரவு!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 100% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை - ஆணையர் உத்தரவு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 100% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை - ஆணையர் உத்தரவு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 100% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை – ஆணையர் உத்தரவு!

தமிழகத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என உத்தரவிட்டு, அதற்கான செயல்முறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் கவனத்திற்கு:

கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே தற்பொழுது துவங்கியுள்ள புதிய கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாக பணிகளுக்காக மட்டும் குறிப்பிட்ட அளவு ஆசிரியர்கள் வருகையுடன் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 100% வருகையுடன் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மாத சம்பளம் முதல் ATM கட்டணம் அதிகரிப்பு வரை – ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள் தெரிவித்துள்ள படி, தமிழக அரசின் அறிவிப்பின் படி 2021-22 ஆம் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை பணிகளுக்காக நிலையான வழிகாட்டுதல் செயல்முறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்களை மாணவர்கள் கவனிப்பதற்கு ஏதுவாக அறிவுரைகளை வழங்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தவிர மாணவர்கள் அளித்துள்ள ஒப்படைப்புகள் மதிப்பீடு செய்து அவற்றை பதிவேடுகள் மூலம் முறையாக பராமரிக்க வேண்டும். அந்த வகையில் மாணவர் சேர்க்கை பணி, கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குதல், மாணவர்களுக்கான ஒப்படைப்புகள், அதற்கான மதிப்பீடுகளை பதிவேடுகளில் பாதுகாத்து வைத்தல் போன்ற பணிகளுக்காக பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் இதயம், புற்றுநோய், சிறுநீரக கோளாறு இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு எடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!