Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.100 முதலீடு ரூ.24 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
Post Office மூலம் மத்திய அரசு மக்களது எதிர்காலத்தை சிறப்பாக மாற்றும் வகையில் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடுத்தர மக்களும் சேமிப்பு தொடங்கும் வகையில் ரெக்குரிங் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரெக்குரிங் திட்டம்:
மத்திய அரசு மக்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் சிறந்த திட்டங்களாக செயல்படுவது சேமிப்பு திட்டங்கள் மட்டுமே. அந்த வகையில் ரெக்குரிங் திட்டம் அனைத்து தர மக்களும் அதாவது நடுத்தர மக்களும் சேமிப்பு கணக்கு தொடங்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.100 முதல் சேமிப்பை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் டிச.10ம் தேதி வரை ‘இதற்கு’ தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
இந்த ரெக்குரிங் திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.15 ஆயிரம் முதலீடு செய்து 5 ஆண்டுகள் முடிவில் ரூ.24 லட்சத்து 39 ஆயிரத்து 714 ரூபாய் ரிட்டன்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.18 லட்சமாக மாறியிருக்கும், அதில் 6 லட்சத்து 36 ஆயிரத்து 714 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இந்த கணக்கை நினைத்தால் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ள முடியும்.
டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!
அவ்வாறு நீட்டித்துக் கொள்ள பார்ம் 4 பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்த கணக்கை நீங்கள் முடிக்க நினைத்தால் 3 வருடங்களுக்கு பிறகு தான் முடிக்க முடியும். இந்த திட்டத்தை 3 நபர்கள் சேர்ந்தும் தொடங்கலாம். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையில் 50% தொகையை கடனாக பெற்றுக் கொள்ளலாம். சேமிப்பிற்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் 2% வட்டி கூடுதலாக வழங்கப்படும்.