எழுத்தறிவு திட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு 100% வருகை பதிவு கட்டாயம்!! – கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை
கற்போம், எழுதுவோம் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கு நடத்தப்படும் எழுத்தறிவு தேர்வு எழுதுவதற்கு 100% வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கற்போம் எழுதுவோம் திட்டம்:
தமிழக அரசின் சார்பில் பொது மக்களில் பல்வேறு காரணங்களால் தங்களது படிப்பை தொடரமுடியாதவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்காக கற்போம் மற்றும் எழுதுவோம் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல் பணிகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மொத்தம் 120 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கேட் நுழைவு தேர்வுக்கான விடைத்தாள்கள் வெளியீடு – தவறுகள் திருத்த மார்ச் 18 கடைசி நாள்!!
தேர்வு:
120 மணி நேர பயிற்சி வகுப்புகளுக்கு பின்னர் தேர்வர்கள் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். இதற்காக கடந்த மே மாதம் முதல் 15,823 கற்போர் எழுத்தறிவு மையங்களில் கற்பிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மார்ச் 27ம் தேதி முதல் கட்ட அடிப்படை எழுத்தறிவு தேர்வுகள் நடத்தப்டுகிறது.
அறிக்கை:
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் உள்ளவர்களின் வருகை பதிவை ஆய்வு செய்த போது பெரும்பாலான மாவட்டங்களில் வருகை பதிவு 50% கீழ் இருந்தது. அனைத்து கற்போரும் 100% வருகை புரிந்து 120 மணி நேர கற்றல் பயிற்சிகளை முடித்து வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணக்கீடு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். 120 மணி நேர கற்றல் பயிற்சி முடிக்காதோருக்கு மார்ச் 26 வரை தொடர் கற்றல்-கற்பித்தல் பயிற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்