TNPSC 10,000+ காலிப்பணியிடங்கள் – குரூப் 2, குரூப் 4 VAO தேர்வு அறிவிப்பு 2022! தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TNPSC 10,000+ காலிப்பணியிடங்கள் - குரூப் 2, குரூப் 4 VAO தேர்வு அறிவிப்பு 2022! தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC 10,000+ காலிப்பணியிடங்கள் - குரூப் 2, குரூப் 4 VAO தேர்வு அறிவிப்பு 2022! தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC 10,000+ காலிப்பணியிடங்கள் – குரூப் 2, குரூப் 4 VAO தேர்வு அறிவிப்பு 2022! தேர்வர்கள் கவனத்திற்கு!

வருகின்ற 2022ம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இதன் மூலம் சுமார் 11,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட TNPSC தேர்வுகள் எதுவும் சரிவர நடத்தப்படாமல் போனது. இந்நிலையில் வரும் 2022ம் ஆண்டிற்கான குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட சில போட்டித் தேர்வுகளை நடத்த இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இது குறித்த வருடாந்திர தேர்வு கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அட்டவணையின் படி வரும் 2022ம் ஆண்டில் 32 போட்டித் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி!

இப்போது இந்த போட்டித தேர்வுகள் மூலம் தமிழக அரசுத் துறையில் 11,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் குரூப் 2 A பிரிவில் மொத்தம் 5831 காலிப்பணியிடங்களும், குரூப் 4 இல் மொத்தம் 5,244 காலிப்பணியிடங்களும் இருப்பதாக TNPSC வாரியம் அறிக்கை அளித்துள்ளது. இருந்தாலும், இந்த தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகும் போது இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த வகையில் TNPSC நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் வெளியாகும் அடுத்த 75 நாள்களில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். இப்போது TNPSC தேர்வு முறையில் சில மாற்றங்களை அறிவித்துள்ள அரசு அதன் படியே தேர்வுகளை நடத்த இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

அதன் படி குரூப் 4 தேர்வுக்கு தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதனுடன் தேர்வு எழுதுபவர்கள் OMR விடைத்தாள்களில் கருப்பு மையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் விடைத்தாள்களை கொண்டு வரும் லாரிகள் GPS கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!