தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கூறியுள்ளார்.
10 ஆயிரம் பணியிடங்கள்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுப் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோயில் நிலங்களை மீட்டல், அறநிலையத்துறை சார்பாக கல்லூரிகள் அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர் பாபு பல்வேறு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை பட்ஜெட் தாக்களின் போது இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்களின் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து முதுநிலை திருக்கோயில்களான மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளிட்ட 47 திருக்கோயில்களில் பாதுகாப்பாளர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு!
அதனை தொடர்ந்து முதுநிலை அல்லாத திருக்கோயில்களான மன்னாா்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில் உள்பட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாப்புப் பணியாளா்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் திருக்கோயில் அதிகாரிகள் மூலம் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் பயிற்சிகள் வழங்கப்பட்டு அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் சேகர் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.