அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.10,000 நிவாரணம் – முன்னாள் முதல்வர் கோரிக்கை!
புதுவையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ரூ.5000 நிவாரணம் வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்திருந்தது. அதை ரூ.10,000 ஆக உயர்த்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
நிவாரணம்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
இப்படி அதிகமாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாய நிலங்களில் அதிகமான அளவு நீர் தேங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்ற 60,000 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் – தமாகா சார்பில் கோரிக்கை!
இந்நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது. எனவே புதுவை முதல்வர் ரங்கசாமி சிவப்பு அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பாரபட்சமின்றி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மக்களுக்கான நிவாரண வழங்குவதில் மாறுபாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.