ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 பொருட்கள் பொங்கல் பரிசு 2022 – டெண்டர் பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதே போல் புதுச்சேரியிலும் பொங்கல் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை ஆண்டுதோறும் அரசு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து புதுவையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரூ.200 பணம் கொடுக்கப்பட்டது. இந்த வருடம் பணமாக இல்லாமல் பரிசு பொருளாக வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
இந்த ஆண்டு ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மஞ்சள் – 100 கிராம், பச்சரிசி – 2 கிலோ, கடலை பருப்பு – அரைகிலோ, துவரம் பருப்பு – அரை கிலோ, உளுந்து – அரை கிலோ, பச்சைப்பயறு – அரை கிலோ, வெல்லம் – -1 கிலோ, முந்திரி – 50 கிராம், திராட்சை – 50 கிராம், ஏலக்காய் -10 கிராம் வீதம் 10 பொருட்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதனை சுமார் 3 லட்சத்து 31 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பாப்ஸ்கோ நிறுவனத்திடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.3 முதல் பள்ளிகள் திறப்பு – டிச.28ம் தேதி ஆலோசனை!
இந்த பரிசு பொருட்களை மக்கள் எடுத்து செல்வதற்கு ஏதுவாக தனித்தனி பைகளை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் தற்போது இந்த 10 பொருட்களையும் தனித்தனியாக பார்சல் செய்து பின்பு அதனை ஒட்டுமொத்தமாக ஒரே பையாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது அனைத்தும் பாப்ஸ்கோ நிறுவனம் மூலமாக புதுச்சேரி, காரைக்கால், மாகி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. புதுவை அரசு பொங்கல் தினத்துக்குள் இந்த பரிசு பொருட்களை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் அல்லது அரசு குறிப்பிடும் பகுதிகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.