ஜூலை 30 முதல் 10 ஆம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் ரத்து செய்யப்பட்டதான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் ஜூலை 30 ஆம் தேதி முதல் நேரடி முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் அதிகரித்து வந்ததன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வுகளில் சில கணக்கீடுகள் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகளை நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அதன் படி சிறப்பு பொதுத்தேர்வானது ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை ஆப்லைன் முறையில் அதாவது நேரடி முறையில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஜூலை 5 ஆம் தேதி முதல் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட உள்ளன. ஒடிசா இடைநிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்தபடி இந்த சிறப்பு தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
TN Job “FB Group” Join Now
முன்னதாக ஒடிசாவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்த பிற்பாடு, அம்மாணவர்களுக்கான மதிப்பீடுகளில் 97.89% பேர் தேர்ச்சியடைந்ததாக ஒடிசா இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. இந்த தேர்வு முடிவுகளை எதிர்த்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தேர்வு வாரியம் மீது புகார்களை அடுக்கி வந்தனர். இந்த எதிர்ப்புகளை தொடர்ந்து, மதிப்பீடுகளில் எவ்வித சலுகையும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் கொடுத்தது. இதை தொடர்ந்து தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகளை நடத்துவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.