10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!
கோவை சிஐடி கல்லூரியில் மேலும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அக்கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய்த்தொற்று பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் எளிய வழிமுறைகள் – இன்று முதல் தொடக்கம்!
இதற்கிடையில் கேரள எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோவை அவினாசி சாலையில் சிஐடி கல்லூரி எனப்படும் கோவை தொழில்நுட்ப கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒரு மாணவி உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
‘இந்த’ 21 வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் – சூப்பர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து மாணவியுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கல்லூரியில் 16 மாணவிகள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வளாகம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.