நாடு முழுவதும் நாளை முதல் 10 ரயில்கள் ரத்து – கிழக்கு ரயில்வே அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாளை முதல் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கிழக்கு ரயில்வே அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமேசான் Prime வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இந்த பிளான் கிடையாது!
மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு பக்கம் முழு ஊரடங்கு, ஒரு பக்கம் கொரோனா அச்சம் காரணமாக ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் ரயில்வே நிர்வாகம் பயணிகள் அதிகம் செல்லாத ரயில்களை ரத்து செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக கிழக்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.