வீடுகளில் ஆடு, மாடு வளர்த்தால் 10 ரூபாய் வரி – மாநகராட்சி அறிவிப்பு!
மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் வளர்த்தால் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும். மேலும் அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சி அறிவிப்பு:
தமிழகத்தில் ஏராளமானோர் ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளை வளர்க்கிறார்கள். ஒரு சிலர் விலங்குகளை சரியாக பராமரிக்காமல் தெருவில் சுற்ற விடுகின்றனர். இந்த விலங்குகளால் சாலை செல்லும் வழிப்போக்கர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சிலர் வளர்ப்பு பிராணிகளை திடீரென முழுமையாக விட்டு விடுகிறார்கள். அவை உணவின்றி இறக்கும் நிலைக்கு வந்து விடுகிறது. ஆடு, மாடுகள், நாய் போன்ற விலங்குகள் அதிக எண்ணிக்கையில் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி விடுவிப்பு – வருவாய் பற்றாக்குறை நிதி!
இதனை தடுக்கும் நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் வளர்த்தால் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும். மேலும் அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் நாய்களை விட்டால் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டால் அதன் உரிமையாளர்களுக்கு 1000 அபராதம் விதிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும் இறைச்சி கடைகளில் இருந்து வரும் திடக்கழிவுகள் முலம் சுற்றுச்சூழல் அசுத்தம் ஏற்பட்டால் கடை உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத விதிப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கூற விரும்பினால் விதிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்க கூடிய இறைச்சி கடைகள் மற்றும் விலங்குகள் விற்பனை நிலையங்களுக்கு ஆண்டு உரிமம் சதுர அடிக்கு 10 ரூபாய் என்றும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.