இந்தியாவில் 10 ரூபாய் நாணயம் செல்லாது – பரவும் வதந்தி.. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி மக்கள் மத்தியில் அதிக அளவு பரவி வருகிறது. இது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
10 ரூபாய் நாணயம்:
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த நாணயம் பயன்பாட்டுக்கு வந்து இத்தனை வருடம் ஆகியும் தற்போது வரை 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் 10 ரூபாய் நாணயம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் 10 ரூபாய் நாணயங்களை சில நேரங்களில் கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்திக்கு முடிவுக்கு கட்டும் வண்ணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி அனைத்து மாநில அரசு பேருந்துகளிலும் ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும் பேருந்துகளில் 10 ரூபாய் நாணயம் தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும். அதனை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.10 நாணயத்தை பெற வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.