தமிழகத்தில் தனியார் ரயில் போக்குவரத்து – 10 நிறுவனங்கள் விண்ணப்பம்!!
தமிழகத்தில் தனியார் ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இதனை தொடர்ந்து தனியார் ரயில் சேவைக்காக 10 பெரும் நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது.
தனியார் ரயில் சேவை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. சுமார் ஒரு ஆண்டு காலமாக முழுமையான பயணிகள் ரயில் சேவை இயங்கலாம் சிறப்பு ரயில்கள் மட்டுமே தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சில வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து சேவையை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டது. கொரோனா நோய்பரவல் காரணமாக இந்த திட்டம் தள்ளிப்போன நிலையில் தற்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளிகளும் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 10 பெரும் தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. ஒப்பந்த புள்ளிகளை இந்த மாத இறுதியில் திறக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தாம்பரம் பகுதி முழுமையான தனியார் ரயில் சேவை மையமாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. காரணம் சென்னை பகுதியை மையமாக வைத்து 11 தனியார் ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!
அதன்படி சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, மும்பை, கன்னியாகுமரி, மங்களூர், டெல்லி, செகந்திராபாத் ஆகிய வழித்தடங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனியார் ரயில் திட்ட மதிப்பீடு ரூ.3,221 கோடி என்று ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு மாவட்டங்களுக்கான தனியார் ரயில் சேவைக்கு முனையாக தாம்பரம் செயல்படும் என்றும் தண்டையார் பேட்டை ரயில் நிலையம் தனியார் ரயில்களின் பராமரிப்பு பணிமனையாக மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.