மாநிலத்தின் 10 பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி!
நேற்று (மே.3) நடைபெற்ற ஈத் பண்டிகை கலவரத்தின் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஜோத்பூரின் 10 காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று (மே.3) நடைபெற்ற ஈத் பண்டிகையின் போது கொடி ஏற்றுவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் பதட்டமான சூழ்நிலையை கையாளுவதற்காக ஜோத்பூரின் 10 காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மொபைல் இணைய சேவைகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் 3 முதல் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தொடர்ந்து இந்த வகுப்புவாத பதட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர், பல்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்றும், பண்டிகை கொண்டாட்டங்களை அமைதியாகச் செய்வதை இந்திய அரசும், பாதுகாப்புப் படைகளும் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் காணப்படும் தற்போதைய நிலைமையை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘நிலைமை கட்டுக்குள் உள்ளது.
Exams Daily Mobile App Download
போதிய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை 13 FIRகள் பதிவு செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்டோரை நாங்கள் கைது செய்துள்ளோம்’ என்று ஜோத்பூர் காவல்துறை ஆணையர் நவஜோதி கோகோய் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜோத்பூரில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈத் கொடிகளை நிறுவி, சுதந்திர போராட்ட வீரர் பால்முகுந்த் பிஸ்ஸாவின் சிலைக்கு அருகில் ஒரு ரவுண்டானாவில் கொடியை ஏற்றினர். அப்போது, பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு ஏற்றியிருந்த காவி கொடி காணாமல் போனதாக பிற சமூகத்தினர் குற்றம் சாட்டியதால் இந்த மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.