அரசு ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
சண்டிகரில் தேசிய சுகாதார இயக்க ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 81% ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதனை தொடர்ந்து இந்த மாதம் மேலும் 3% அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 34% அகவிலைப்படி அளித்தால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறும் நபர் 34% அகவிலைப்படி ரூ.6,120 சம்பளம் கூடுதலாக கிடைக்கும்.
மேலும் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகை ஒரே தவணையில் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்! குவியும் புகார்கள்!
தற்போது 7வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தகவல் வந்துள்ளது. ஊதிய உயர்வு என்பது மத்திய அரசு ஊழியர்களின் பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் 18,000 திலிருந்து 26 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது. அனைவருக்கும் 8 ஆயிரம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளனர். இதனையடுத்து சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை – முக்கிய தகவல்கள் இதோ!
இந்த நிலையில் சண்டிகரில் தேசிய சுகாதார இயக்க ஆம்புலன்ஸ் சேவை பிரிவில் பணிபுரியும் சுமார் 50000 ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு, 2022 ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 81% ஊழியர்கள் பயன்பெறுவார்கள். மேலும் வரையறுக்கப்பட்ட பங்களிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால், அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.