தமிழக காவல்துறையில் 10% இட ஒதுக்கீடு – சட்டத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
தமிழக காவல்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க கோரி வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உறுதி செய்துள்ளது.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்யும் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2021ம் ஆண்டு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க அரசு அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனை தொடர்ந்து காவலர்களின் செயல்திறனை மேம்படுத்த ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் காவலர்கள் கள பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம்.
மின் கட்டணத்தை பாதியாக குறைக்க புதிய கருவி – மார்ச் மாதம் முதல் விற்பனை!!
இவ்வாறு காவலர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக காவல் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான சட்டத்தை தமிழக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதனால் அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டத்தை மேல்முறையீடு செய்தது. தற்போது இந்த காவல் அமைச்சு பணியாளர் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.