தமிழக அரசு அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி உயர்வு – உடனே வழங்க கோரிக்கை!
தமிழக அரசு கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி,திருபுவனத்தில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசி க்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்த பிறகு அவர் தேர்தலின் போது அளித்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்று வருகிறார். இதில் அகவிலைப்படி பற்றி எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.
அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை (WFH) – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதனால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர்களின் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து 2022 ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ அரசு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் அகவிலைப்படியை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த அக்.6-ம் தேதி நடைபெற்ற கைத்தறி மானிய கோரிக்கை விவாதத்தின்போது, கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி – லாக் செய்யும் எளிய வழிமுறைகள் இதோ!
ஆனால் இதுவரை உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, அரசு அறிவித்த அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்.கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை மாதத்தின் முதல் வாரத்திலேயே வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்கள் நெய்யும் கைத்தறி துணிகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.