தடுப்பூசி செலுத்தினால் 10% விமான டிக்கெட் கட்டண சலுகை – பிரபல நிறுவனம் அறிவிப்பு!
நாட்டில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி கொள்வதற்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விமான பயணத்தின் டிக்கெட் கட்டண சலுகை அளிக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான கட்டணம்:
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் தற்போது கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் தகுதி உடைய மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டு மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அரசு சார்பில் ரூ.4000 கூடுதல் உதவித்தொகை – ஜூன் 30 கடைசி நாள்!
தற்போது அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விமான பயணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பை விமான சேவையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இது குறித்து இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, இந்தியாவில் தடுப்பூசி திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் எங்கள் நிறுவனம் சார்பில் புதிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் விமான பயணத்தில் சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் அல்லது இரண்டு டோஸ் செலுத்தியவர்களுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீத சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை நேற்று (ஜூன் 23) முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சலுகை நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கும் வரை நீட்டிக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
WHAT A FUNNY ADVERTISEMENT?
WILL INDIGO AIRLINES ALLOW ANYONE TO FLY WITHOUT A SINGLE DOSE OF VACCINATION?