தமிழகத்தில் Aavin நிறுவனம் சார்பில் புதிதாக 10 பொருள்கள் அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆவின் நிறுவனத்தில் 10 புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
புதிய பொருள்கள்:
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் முன்னணி பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் பல ஆண்டுகளாக மக்களுக்கு தரமான பால் வழங்கி சேவை செய்து வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றால் பால் விலை குறைக்கப்படும் என அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது . மேலும் ஜி.எஸ்.டி., வரி உயர்வை காரணம் காட்டி, தயிர், நெய், மோர் விலையை 5 மற்றும் 12 சதவீதம் என உயர்த்தியது.
விலை உயர்வு எவ்வளவு இருந்தாலும் ஆவின் நிறுவனத்தை தேடி தான் மக்கள் அதிகம் படையெடுக்கின்றனர். மேலும் வெறும் பால் மட்டுமில்லாமல் இல்லாமல் தமிழகத்தில் ஐஸ்கிரீம், இனிப்பு, நெய் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யவுள்ளது. அதன் விவரங்களை பற்றியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய பொருள்கள் விற்பனையை ஆகஸ்ட் 20-ம் தேதி பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்க இருக்கிறார்.
தமிழகத்தில் நாளை (ஆக.17) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
பொருள்களின் பட்டியல்:
- கோல்டு காஃபி (Cold Coffee)
- வெள்ளை சாக்லேட்
- பலாப்பழ ஐஸ்கிரீம்
- வெண்ணெய் கட்டி
- பாசுந்தி
- ஆவின் ஹெல்த் மிக்ஸ்
- பாலாடை கட்டி
- அடுமனை யோகர்ட்
- ஆவின் பால் பிஸ்கட்
- ஆவின் வெண்ணெய் முறுக்கு