தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.10 லட்சத்திற்குள் கூடுதலான சிகிச்சைத்தொகை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான தொகையை 10 லட்சத்திற்கும் கூடுதலாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. காப்பீடு நிறுவனங்களுக்கும் இது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அண்மையில் அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகை படி உயர்வு போன்றவைகளை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் குறைவான தொகையில் சிகிச்சை பெற முடியும். இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறை அறிவிப்பு!
அதனால் புதிய நடைமுறையாக மருத்துவ காப்பீடு கட்டணம் 180 ரூபாயில் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் 2025 ஆம் ஆண்டு வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மாநிலத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மேலும் கொரோனா சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை 10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான தொகையை 10 லட்சத்திற்கும் கூடுதலாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான, யுனைடெட் இந்தியா நிறுவனங்களிடம் இது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசின் இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.