தமிழக அரசு வழங்கும் 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகை – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தகைசால் தமிழர் விருது:
தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிகாக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் தமிழை புகுத்தியுள்ளது. தமிழர்களும் தொடர்ந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் இன மக்களின் உரிமைக்கும் உழைத்து வருகின்றனர். இவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையிலும் விருது வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி ஆண்டுதோறும் தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்ஸா – பிரபல நிறுவனம் அறிவிப்பு!
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தின விழாவின் போது வீர தீர செயல்கள் செய்தவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி அரசு சிறப்பித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை பாராட்டும் வகையில் தகைசால் தமிழர் விருது வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விருதோடு சேர்த்து 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை காசோலையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே தமிழக அரசு தமிழறிஞர்களுக்கும், தமிழ் பணி ஆற்றுபவர்களுக்கும் பல்வேறு விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது. மேலும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையும் அளித்து வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக தகைசால் விருதும் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து தமிழக அரசு தமிழ் பணியாற்றுபவர்களை பாராட்டி வருகிறது. இது தமிழ் மொழி & தமிழ் இன மக்களின் வளர்ச்சிக்கும் ஏற்ற சிறந்த முயற்சியாக உள்ளது.