தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 10 லட்சம் பேர் பதிவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முக்கிய ஆவணமாக இருப்பது ரேஷன் அட்டைகள் ஆகும். மக்கள் பலர் புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை 6.65 லட்சம் பேருக்கு புதிய புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதிய ரேஷன் அட்டை:
தமிழக அரசு சார்பில் மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய குடும்பங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை நம்பியே அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு சர்க்கரை, கோதுமை, ரவை, கொண்டைக்கடலை போன்றவை வழங்கப்படுகிறது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் எச்சரிக்கை!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது. மக்கள் ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் விவரங்களை வீட்டில் இருந்தே செயலி மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் கடைகளில் கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் முறையில் தான் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. குடும்ப உறுப்பினர் யாரவது கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் அல்லது முதியவர்கள் கடிதம் அனுப்பி வைத்து வேறு ஒருவர் ரேஷன் பொருட்கள் பெறலாம்.
கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை அறிந்து கொண்ட பாரதி? வெளியான போட்டோ!
ரேஷன் அட்டைகளில் பெண் குடும்பத் தலைவர்கள் இருக்கும் அட்டைகளுக்கு மட்டுமே அரசு வழங்கும் ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அதிகாரபூர்வமற்ற தகவலால், பலர் புதிய அட்டை பெற விண்ணப்பித்து வந்தனர். அதன்படி கடந்த செப்.26 வரை 10.54 லட்சம் பேர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர். அதில் 7.28 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில் 2.61 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கப்பட்ட விண்ணப்பித்த 6.65 லட்சம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.