TCS நிறுவனத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை – புதிய நிதியாண்டில் இலக்கு!
இந்தியாவின் முன்னணி IT சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் அடுத்த நிதியாண்டுக்குள் புதிய பணியமர்த்தல் மூலம், ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 1 மில்லியனாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TCS வேலைவாய்ப்பு
கொரோனா நோய் தொற்று காலத்துக்கு பின்னாக வலுவடைந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவை சேர்ந்த IT நிறுவனங்கள் ஈடுபாடு காட்டி வருகிறது. அந்த வகையில் புதிய சேவைகளை நிறைவேற்ற, ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில முன்னணி IT நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது. அதாவது இந்தியாவை சேர்ந்த TCS, இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட IT நிறுவனங்கள் 2021-22 ஆம் நிதியாண்டுக்குள் புதிய ஊழியர்களை அதுவும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்க ஆலோசித்துள்ளது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – ஆகஸ்ட் 28, 29 இல் ரெட் அலெர்ட்!
இதன் மூலம் வரும் 2022 ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), 1 மில்லியன் ஊழியர்களைக் கொண்டதாக மாறும் என சமீபத்தில் தெரிவிவித்திருந்தது. இது தொடர்பாக TCS நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி N.கணபதி சுப்ரமணியம் கூறுகையில், ‘TCS நிறுவனம், 2021-22 ஆம் முதல் காலாண்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த எண்ணிக்கை அடுத்த நிதியாண்டுக்குள் சுமார் 1 மில்லியனாக அதிகரித்து, பெருளமளவு ஊழியர்களை கொண்டுள்ள ஒரு முன்னணி நிறுவனமாக மாறக்கூடும்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, TCS ல் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,09,058 ஆக இருந்தது. இதனிடையே 2021-22 ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள வளாகங்களில் இருந்து 40,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள், 25 சதவீத ஊழியர்களை மட்டுமே அலுவலகம் வரவழைக்க ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.