ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மாதம் 10 கிலோ இலவச ரேஷன்! முழு விவரம் இதோ!
மத்திய அரசின் கரிப் கல்யாண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடர்ந்து, உத்திர பிரதேசத்தில் தகுதியான ரேஷன் பொருட்களை பெறுபவர்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச ரேஷன்
மத்திய அரசின் பொது விநியோகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளின் கீழ் அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும், நியாயவிலைக்கடைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் ரேஷன் பொருட்களை பெறுபவர்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (பிப்.24) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதாவது, பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் (PMGKY) கீழ், இலவச ரேஷன் விநியோக பிரச்சாரம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த PMGKY காலம் நவம்பரில் முடிவடைய இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தியோதயா ரேஷன் பெறுபவர்கள் மற்றும் தகுதியான குடும்பங்களுக்கு டிசம்பரில் இருந்து இரட்டிப்பு ரேஷன் இப்போது வழங்கப்படுகிறது. அதன் படி இப்போது ரேஷன் பயனாளிகள் அனைவரும் கோதுமை மற்றும் அரிசியை மாதம் இருமுறை இலவசமாக பெற உள்ளனர்.
வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – இந்தியாவில் புது சட்டம் அமலாகுமா?
அந்த வகையில் ரேஷன் அட்டைதாரருக்கு 10 கிலோ இலவச கோதுமை மற்றும் அரிசி போன்ற பொருட்களை மாதம் இருமுறை வழங்குவதற்கு உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இப்போது மாநிலங்களின் ஒப்புதலின் அடிப்படையில் சமூக சமையலறை திட்டத்தை 3 வாரங்களுக்குள் மத்திய அரசு தயாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன் படி இந்த திட்ட முறைகள் குறித்து மாநில உணவு செயலாளர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்றும், சமூக சமையல் திட்டத்தை தயாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.