பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை – அரசு திடீர் அறிவிப்பு!
கொரோனா பரவல் குறைந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளதால் 10 நாட்களுக்கு மட்டுமே கோடை விடுமுறை என டெல்லி மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுமே பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மீண்டும் ரத்து – மறு உத்தரவு வரும் வரை அமல்!
கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது இந்தியாவில் கொரோனா குறைந்த காரணத்தினால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் காரணத்தினால் இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு முழு ஈடுபாட்டையும் படிப்பில் காண்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இரண்டு ஆண்டுகளுமே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டதால் மாணவர்களின் கல்வித் திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனை சரிக்கட்ட கோடை விடுமுறையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது டெல்லி மாநிலத்தில் மே 11ம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மாணவர்களின் கல்வி திறனை கருத்தில் கொண்டு ஜூன் 18-ஆம் தேதி வரைக்கும் பள்ளி இயங்கும் எனவும், ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 28 தேதி வரை உள்ள பத்து நாட்களுக்கு மட்டுமே கோடை விடுமுறை எனவும் அரசு அறிவித்துள்ளது.