ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 விதமான பொருட்களுடன் பொங்கல் பரிசு – விநியோகம் தொடக்கம்!
புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்காத பகுதிகளில் வழங்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொங்கல் பரிசு
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. அதன்படி இந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம், பச்சை பயறு, உளுந்து உள்ளிட்ட 490 மதிப்பிலான 10 பொருட்கள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் இதில் 2 கிலோ சர்க்கரை மட்டும் வழங்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பிட்மென்ட் காரணி உயர்வு? முழு விவரம் இதோ!
இதில் வழங்காமல் இருந்த 10 கிலோ அரிசியும் பொங்கல் பரிசுடன் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இதனை பொங்கல் தினத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டதால் இதுவரை இன்னும் சில பகுதிகளில் வழங்கப்படாமல் இருக்கிறது. அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 கிலோ அரிசியும் வழங்கவில்லை.
TNPSC முக்கிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே..!
அதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பையும் 10 கிலோ அரிசியையும் வழங்க வேண்டும் என்று அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி காரைக்காலில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் பணியை அமைச்சர் சந்திர பிரியங்கா அவர்கள் தொடங்கி வைத்தார். அதனால் தற்போது ரேஷன் அட்டைதாரர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாத அனைத்து பகுதிகளிலும் விரைவில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.