தீபாவளியை முன்னிட்டு ‘இந்த’ நிறுவனத்தில் 10 நாட்கள் லீவ் – குஷியில் ஊழியர்கள்!!
இந்தியாவில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையானது பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் இந்த பண்டிகையை தங்களின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாட 10 நாட்கள் விடுமுறை என பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
10 நாட்கள் விடுமுறை
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் ஐடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்த தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு வேலை செய்யும் படி அறிவுறுத்தினர். இதனால் சில ஊழியர்கள் தங்களுக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு சலுகைகளை வழங்கினர். இதில் குறிப்பாக வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கும் மற்ற நாட்களில் வீடுகளில் இருந்தும் பணி புரியலாம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஊழியர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட தேவையான விடுமுறை நாட்களையும் வழங்கியது. இந்த நிலையில் நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்கம் காரணமாக பல ஐடி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சிக்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. அதனால் இந்த பண்டிகையை தங்களின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாட WeWork நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
TNPSC தேர்வு சென்னையில் மட்டுமே…! தேர்வாணையம் அதிரடி!
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, WeWork நிறுவன ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினத்தில் ஊழியர்கள் தினமும் சந்திக்கும் வேலைப்பளுவை தவிர்த்து தனது அன்புக்குரியவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும். இதனால் ஊழியர்களின் மனநலம் மேம்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மனநலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்