தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை – வெளியான தகவல்!!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு பின்னர் மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
10 நாட்கள் விடுமுறை:
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக 9, 10 & 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வந்தது.
எதிர்பாராத விதமாக மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டுமாக பள்ளிகள் மூடப்பட்டது. 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விடுமுறையை அளித்தது தமிழக அரசு. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3ஆம் தேதி தேர்வுகள் துவங்கி மே 21 வரை நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைகிறது.
குறைவான வட்டியில் கல்விக்கடன் – எந்த வங்கியில் பெறுவது சிறந்தது?
தற்போது தேர்தல் பணிக்காக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளையுடன் (06-03-2021) முடிவடைகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இதை கருத்தில் கொண்டு மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு பின்னாக 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்