கல்லூரிகள் & பல்கலைக்கழகங்களுக்கு 10 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
நடப்பு ஆண்டுக்கான பள்ளி கோடை விடுமுறைகள் 10 நாட்களாக குறைக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் உள்ள கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை பின்பற்ற ஒடிசா உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கோடை விடுமுறை
தற்போது நடைபெற்று வரும் 2021-22ம் கல்வியாண்டு கொரோனா பரவல் இடையூறால் சற்று தாமதமாக முடிவடைய இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. இப்போது நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி கோடை விடுமுறைகள் 10 நாட்களாக குறைக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!
அந்த வகையில் அனைத்து அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கோடை விடுமுறை ஜூன் 1 முதல் ஜூன் 16 வரை அனுமதிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை நேற்று (ஏப்ரல்.18) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனுடன் பாடத்திட்டம் உட்பட பிற அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் முடிக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு மாநில உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேவைப்பட்டால், ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தை நீட்டித்து விடுமுறை நாட்களிலும், வேலை நாட்களிலும் கூடுதல் வகுப்புகளை நடத்தலாம் என்றும் கோடை விடுமுறையை குறைப்பதற்கு பதிலாக, ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரத்தில், மாநில பள்ளி மற்றும் வெகுஜன கல்வித் துறை, கற்றல் இடைவெளியைக் குறைக்க பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையை ஒரு மாத காலத்திற்கு குறைத்து பள்ளிகளுக்கு ஜூன் 6 முதல் 16 வரை 10 நாட்கள் விடுமுறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.