தமிழகத்தில் வங்கிகளுக்கு ஜனவரி மாதம் 10 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் மட்டும் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வங்கி விடுமுறை:
நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் மக்களுக்குமான அத்தியாவசிய சேவையை வழங்கி வருகிறது. அத்தகைய சேவைகளை வழங்கும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட உள்ள விடுமுறை நாட்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறையானது 3 வகைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மாநில வாரியான விடுமுறை, பொதுவிடுமுறை மற்றும் பண்டிகைக்கான விடுமுறை என்பதன் அடிப்படையில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – கால அட்டவணை வெளியீடு!
அதன்படி இந்தாண்டு முடிவுக்கு வருகின்ற தருவாயில் உள்ளது. இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது. அதனால் தமிழகத்தில் வரும் வருடத்தின் முதல் மாதமான ஜனவரியில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் வங்கிகள் இயங்காது. அதனை மக்கள் அறிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய விடுமுறை நாட்கள் குறித்த விபரங்களை பின்வருமாறு காணலாம்.
தமிழகத்தில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை:
- ஜனவரி 1 – புத்தாண்டு
- ஜனவரி 2 – ஞாயிற்றுக்கிழமை
- ஜனவரி 8 – 2வது சனிக்கிழமை
- ஜனவரி 9 – ஞாயிற்றுக்கிழமை
- ஜனவரி 14 – பொங்கல் பண்டிகை
- ஜனவரி 15 – திருவள்ளுவர் தினம்
- ஜனவரி 16 – உழவர் திருநாள்
- ஜனவரி 22 – நான்காம் சனிக்கிழமை
- ஜனவரி 23 – ஞாயிற்றுக்கிழமை
- ஜனவரி 26 – குடியரசு தினம்
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்