அடுத்த 10 நாட்களுக்கு சுய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த கிராமம் – ஒமிக்ரான் பரவல் எதிரொலி!

0
அடுத்த 10 நாட்களுக்கு சுய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த கிராமம் - ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
அடுத்த 10 நாட்களுக்கு சுய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த கிராமம் - ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
அடுத்த 10 நாட்களுக்கு சுய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த கிராமம் – ஒமிக்ரான் பரவல் எதிரொலி!

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள முஸ்தாபாத் மண்டலின் கிராமத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அந்த கிராமத்து மக்கள் தன்னார்வமாக 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.

முழு ஊரடங்கு

இந்தியாவில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களை பாதித்திருக்கும் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் பரவல் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களை ஆட்கொண்டுள்ளது. இந்த சூழலில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளின் போது நோய் தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதால் சில மாநிலங்களில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கிராம மக்கள் தன்னார்வமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி பின்பற்றி வருகின்றனர்.

Post Office இன் சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

அதாவது துபாயில் இருந்து தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள முஸ்தாபாத் மண்டலின் குடெம் பகுதிக்கு வந்த நபர் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த கிராமம் அடுத்த 10 நாட்களுக்கு சுய பூட்டுதலை விதித்துள்ளது. விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்திருந்தாலும், அடுத்தடுத்த பரிசோதனையில் அந்நபருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதற்குள் சொந்த கிராமத்துக்கு திரும்பிய நபரது மனைவி மற்றும் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இருப்பினும், அவர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா, இல்லையா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக முஸ்தாபாத் மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சீவ் கூறுகையில், 28 வயதான நபர் ஒருவர் துபாயிலிருந்து டிசம்பர் 16 ஆம் தேதி தெலுங்கானா வந்ததாகவும், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு நேர்மறை உறுதியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மருத்துவத் துறையின் மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு, டிசம்பர் 20 அன்று அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இப்போது ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபரின் கிராமத்தை சேர்ந்த மக்கள் அடுத்த 10 நாட்களுக்கு சுய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அந்த வகையில் இறைச்சி மற்றும் மளிகைக் கடைகளை மூடுமாறு கிராமத்தில் வசிப்பவர்களுக்கு பஞ்சாயத்து அழைப்பு விடுத்ததாகவும், முழு கிராமத்தையும் வைரஸிலிருந்து பாதுகாக்க தானாக முன்வந்து பூட்டுதலை விதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று (டிச.23) முதல் அடுத்த 10 நாட்களுக்கு கிராமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல மக்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – “எண்ம (டிஜிட்டல்) பலகை திட்டம்” அறிமுகம்!

மேலும் கிராம மக்களுக்கு காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு ஆபத்தில் உள்ள நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு RT-PCR சோதனைகளை நடத்தப்பட்டு, அவர்கள் கொரோனா பாசிட்டிவ் சோதனை செய்தாலும் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், மரபணு சோதனைக்கு பின்னர் ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டால் முகவரியின் அடிப்படையில் அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!