தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு – உச்ச நீதிமன்றம் விதித்த புதிய உத்தரவு!

0
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - உச்ச நீதிமன்றம் விதித்த புதிய உத்தரவு!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - உச்ச நீதிமன்றம் விதித்த புதிய உத்தரவு!
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு – உச்ச நீதிமன்றம் விதித்த புதிய உத்தரவு!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மொழி சிறுபான்மையின மாணவர்கள் குறித்து புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தமிழ் மொழி கட்டாயம்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தற்போது முதல் பாடமாக தமிழ் உள்ளது.தமிழ் மொழியை முதல் பாடமாக்கும் இந்த சட்டம் கடந்த 2006ம் ஆண்டு அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தின் மூலம் பிறமொழியை சேர்ந்த பள்ளி மாணவர்களும் கட்டாயம் பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை எழுத வேண்டியுள்ளது.

பீகாரில் ரயில் தண்டவாளங்கள் திருட்டு – இப்படியும் நடக்குமா? திகைப்பில் போலீசார்!!

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தினர் மனு தாக்கல் செய்தனர். மேலும் அந்த மனுவில் இந்தியாவில் பல மாநிலங்களில் மும்மொழி கொள்கை உள்ளது. ஆனால் தமிழகத்தில் அமலில் உள்ள இருமொழி கொள்கையால் மொழி சிறுபான்மையின மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுத மொழி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் 1 ஆண்டுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!