10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் தற்போதைய இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலை தேடி தங்கள் வாழ்நாளை கழித்து வருகின்றனர். கொரோனா காலம் என்பதால் வேலை கிடைப்பது பெரும் பாடாக உள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் – முழு விபரங்கள் இதோ!
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே அக்டோபர் 1ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் 4.80 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பல் – அமைச்சர் தகவல்!
கல்வித்தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளன்று எடுத்து வருவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்னும் இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனவும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த வசதியை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கோரியுள்ளார்.