10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
அதிகரித்து வரும் கொரோனா நோய் பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு
கடந்த ஆண்டு ஆரம்பித்த கொரோனா நோய்பரவல் தாக்கம் இன்று வரை சற்றும் குறையவில்லை. கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து, மீண்டுமாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட துவங்கியது.
TN Job “FB Group” Join Now
தற்போது முழு நாடும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகிறது. மீண்டுமாக துவங்கப்பட்ட பள்ளிகளை மூடக்கூடிய சூழல் உருவானது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலமும் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்து வருகிறது.
புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் – எளிய வழிமுறைகள் இதோ!!
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் பயிலும் 8, 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக ராஜஸ்தான் மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. அதே போல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்வுகளை ஒத்தி வைப்பதாகவும், தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.