தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஒரு வாரம் பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவு!
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று, அதனை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்றவற்றால் ஏராளமானோர் வேலை இழந்து மாத வருமானமின்றி சிரமப்பட்டனர். இந்த இக்கட்டான சூழலில் தனியார் பள்ளிகள் மாணவர்களை கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் வாழ்வாதாரம் இழந்து அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கல்வி கட்டணம் கட்ட சொல்லி வற்புறுத்துவதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
HDFC, ICICI & Federal வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – FD திட்ட வட்டி விகிதம் உயர்வு!
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 75% கல்வி கட்டணத்தை தவணை முறையில் பெற்றுக் கொள்ள பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இது போன்ற காரணங்களால் தனியார் பள்ளியில் பயிலும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த நிலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. இதனை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தகுதித்தேர்வுகளை அறிவித்தது. அடுத்தகட்டமாக பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி இடமாறுதல் பதவி உயர்வு போன்றவைகளை வழங்கியது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் முதன்மை கருத்தாளர்களாக செயல்படும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் 23ம் தேதி முதல் 28 வரை மதுரை மாவட்டத்தில் 6 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியை முடித்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மற்ற ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.