ஆதரவற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 1% இட ஒதுக்கீடு – மாநில அரசு உத்தரவு!

0
ஆதரவற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 1% இட ஒதுக்கீடு - மாநில அரசு உத்தரவு!
ஆதரவற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 1% இட ஒதுக்கீடு - மாநில அரசு உத்தரவு!
ஆதரவற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 1% இட ஒதுக்கீடு – மாநில அரசு உத்தரவு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யசோமதி தாக்கூர் மாநிலத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநில அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு:

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த புதன்கிழமை அன்று மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் பல முக்கிய பிரச்சனைகள் மற்றும் தேவையான திட்டங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் அரசின் கீழ் பணி வாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கை போன்ற அனைத்திற்கும் அனைத்து பிரிவினருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ளது. அரசு அளித்துள்ள இட ஒதுக்கீட்டின் படியே அனைத்து நியமனமும் நடக்கும்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி ‘பிரிவினை அதிர்ச்சி நினைவு’ தினம் அனுசரிப்பு – பிரதமர் மோடி!

கடந்த 2018ம் ஆண்டு மாநில மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதாக தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக திட்டம் அமலுக்கு வரவில்லை. புதன்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு அரசு செயல்பாட்டை வகுத்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யசோமதி தாக்கூர் வெளியிட்டார். அதாவது, மாநிலத்தில் ஆதரவற்றவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 1% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த கொள்கைகையை செயல்படுத்துவதற்காக ஆதரவற்ற குழந்தைகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உறவினர்கள், கிராமம், முகவரி போன்றவற்றைப் பற்றி தெரியாதவர்கள் A பிரிவு என்றும், பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் சாதி குறிப்பிடாதவர்கள் அல்லது சாதி சான்றிதழ் இல்லாதவர்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்க்கப்படும் குழந்தைகள் B பிரிவு என்றும், குறிப்பிட்ட வயதிற்கு முன்னதாக பெற்றோரை இழந்து, உறவினர்களால் வளர்க்கப்பட்டு, அவர்களின் சாதி விவரங்கள் உள்ளவர்கள் C பிரிவில் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. A மற்றும் B இரண்டு பிரிவினர் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் திட்டங்களில் இட ஒதுக்கீடு பெற தகுதியுடையவர்கள், மூன்றாவது பிரிவில் உள்ளவர்கள் கல்வி திட்டங்களுக்கு மட்டுமே தகுதியுடையவர்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!