தமிழகத்தில் பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து – முதல்வர் அறிவிப்பு!
வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
நுழைவு வரி ரத்து:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து ஆகஸ்ட் 23 முதல் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறைகளிலும் அமைச்சர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும், அதன் மூலம் 7000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஊரடங்கிற்கு முன் சீசன் டிக்கெட் எடுத்த ரயில் பயணிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
மாற்றுத்திறனாளர்களுக்கு 1,095 பின்னடைவு பணியிடங்களுக்கு சிறப்பு தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் வ உ சிதம்பரனார் பெயரில் விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 ஆக அதிரடி உயர்வு – இன்றைய விற்பனை!
இதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பாக நெசவு தொழிலார்களை கருத்தில் கொண்டு வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் நுழைவு வரி ரத்துக்கான மசோதா விதி 110ன் கீழ் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.