தமிழக அரசில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பெரும்பாலானோர் வேலையிழந்து தவித்து வந்தனர். இந்த நேரத்தில் அரசு நோய்த் தடுப்பு பணிகளால் முழு வீச்சில் இறங்கியது. இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அளித்தது. அதனால் வேலைகளை இழந்தோர் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைகளை அளிக்க முன் வந்து காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – விரைவில் முடிவுக்கு வரும் வீட்டிலிருந்து வேலை!
அந்த வகையில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 மற்றும் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக குரூப்4&VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் Company Secretary பணியிடத்திற்கு Associate member of Institute of company secretaries கல்வி தகுதி உடையவர்களும், 3 வருட பணி அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 21 முதல் 41 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக 1 லட்சம் வழங்கப்படும். அடுத்ததாக Associate consultant காலியிடங்கள் – 5 B.E in ECE/EEE/E&I/Computer Science/IT முடித்தவர்களும் மற்றும் 5 வருடம் பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். Consultant காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4 ஆகும். இப்பணியிடத்திற்கு B.E Computer Science/IT முடித்தவர்கள் தகுதியானவர்கள் என்றும், மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏப்ரல் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.