தமிழகத்தில் Ph.D படிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு – ரூ.1 லட்சம் உதவித்தொகை! அரசு அதிரடி!
தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.1 லட்சம் உதவித்தொகை:
மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடக்கக் கல்வி முதல் முனைவர் படிப்பு வரை மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மானவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அரசு விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அதிக அளவில் உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையானது கல்வியில் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – டிசம்பர் 31 கடைசி நாள்!
அந்த வகையில் கடந்த 2013 – 14ம் ஆண்டு முதல் முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து முனைவர் படிப்பில் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகைக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திமுக- வின் புதிய பட்ஜெட்டில் முனைவர் படிப்புகளுக்கு உதவித்தொகை ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்படும்.
தமிழகத்தில் 2000+ அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
மேலும் இதற்கான நிதி ரூ.16 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1600 மாணவர்கள் வீதம் ரூ.1 லட்சம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களின் குடும்ப வருமானத்தை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 2022 – 23 நிதியாண்டில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கி தருமாறு ஆதிதிராவிட நல ஆணையர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.