தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை – ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது!
தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் விருது பெற தகுதியானவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
விருது அறிவிப்பு:
தமிழகத்தில் எழுத்தாளர்கள், தமிழறிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் மொழி வன்மையை பாராட்டும் வகையில் அரசு ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. மேலும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்.16 முதல் பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் விருது வழங்கி ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்க வேண்டும் என்று கூறினார்.
ரேஷன் கார்டில் மொபைல் எண் மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
அதனால் பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து கவிதை, புனைவு இலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருதும் 1 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
- அபி – கவிதை
- இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்
- எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை
- வெளி ரங்கராஜன் – நாடகம்
- மருதநாயகம் – ஆங்கிலம்
- நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)