இந்திய பாதுகாப்பு படைகளில் 1,22,555 காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சர் விளக்கம்!
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் அவர்கள் இந்திய பாதுகாப்பு துறையில் மொத்தம் 1,22,555 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த எழுத்துப்பூர்வ அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு படை பணிவாய்ப்புகள்:
நாட்டில் முக்கிய துறையான பாதுகாப்பு படையில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதிகாரிகளின் பணிக்கு தேர்வுகள் மூலமாக நியமனம் நடைபெறும். அவ்வப்போது பதிக்காப்பு பணிகளில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு விளம்பரங்கள் மூலமாகவும், அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலமாகவும் வெளியிடப்படும். பள்ளி, கல்லூரிகளில் என்சிசி முகாம்களில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் பணிவாய்ப்பில் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்.
TNPSC துறைத்தேர்வு எழுதும் அதிகாரிகள் கவனத்திற்கு – ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை!
தற்போது நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டின் முக்கிய துறைகள் மற்றும் திட்டங்களை பற்றிய அறிவிப்புகளையும், அவற்றை செயல்படுத்தும் முறைகளை குறித்தும் முக்கிய விவாதங்கள் நடத்தப்படும். இந்த விவாதங்களில் இன்று பாதுகாப்பு துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றியும், காலியிடங்கள் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் அவர்கள் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – உடற்தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியீடு!
அதன்படி, இந்திய ராணுவத்தில் 7476 அதிகாரிகள் மற்றும் 97177 வீரர்கள் பணியிடங்களும், இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் மற்றும் 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் மற்றும் 11166 வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. பாதுகாப்பு படைகளில் உள்ள பணியாளர்களின் பற்றாக்குறையை நீக்க அரசு பல முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நாட்டில் இளைஞர்கள் பாதுகாப்பு படையில் சேருவதை ஊக்குவிக்க பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தவும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு என்சிசி முகாம்களின் மூலம் ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.