4 ஆண்டுகளில் கல்வி அறிவு பெறாத 1 லட்சம் பேருக்கு எழுத்தறிவு – மாநில அரசு அறிவிப்பு!!
கேரள மாநிலத்தில் உள்ள பழங்குடியினர், மீனவர் மற்றும் விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்த 1 லட்சம் பேர் புதிதாக எழுத்தறிவு பெற்றுள்ளனர் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
எழுத்தறிவு இயக்க ஆணையம்:
கேரள மாநில கல்வித்துறையின் கீழ் செயல்படும் தனியார் அமைப்பான கேரள எழுத்தறிவு இயக்க ஆணையம் (கேஎஸ்எல்எம்ஏ) பல்வேறு எழுத்தறிவு திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள பல்வேறு சமூகத்தை சேர்ந்த மற்றும் புலம் பெயர்ந்தவர்கள், தொழிலாளர்கள், மீனவ மக்கள் பலருக்கும் எழுத்தறிவு கற்பிக்கப்பட்டுள்ளது.
2021 CA மே மாத தேர்வுக்கான அட்டவணை – ICAI வாரியம் வெளியீடு!!
கேரள எழுத்தறிவு இயக்க ஆணையத்தின் மூலம் இதுவரை 1,35,608 பேருக்கு கல்வியறிவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016-2020 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் தான் அதிக அளவிலான பழங்குடியின மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். புதிய ஆட்சியின் கீழ் அதிக அளவிலான மக்கள் எழுத்தறிவு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் பகுதிகளில் கல்வியறிவு திட்டத்தின் மூலம் 12,968 பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். அக்ஸராசகரம் திட்டத்தின் கீழ் 11,941 பேரும், சங்கதி திட்டத்தின் கீழ் 5,400 மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளரக்ளும் மலையாளம் கற்றுள்ளனர். நவசேதனா திட்டத்தின் கீழ் 3,188 பேர் கல்வி கற்றுள்ளனர் என்று கேஎஸ்எல்எம்ஏ ஆணையத்தின் இயக்குனர் அவர்கள் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்