தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1 லட்ச பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பணி நியமனம் பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் உதகையில் வருகிற 12ம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் பற்றி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது. அதனால் ஏராளமான நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை பணி நீக்கம் செய்தனர். அத்துடன் அரசாலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர முடியாத நிலை இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை கிடைக்க அரசு வழிவகை செய்கிறது.
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாம் நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் உதகையில் நடைபெற்று வரும் முகாமுக்கான ஏற்பாடுகள் குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார். அத்துடன் இவர் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் இதுவரை 56 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக சுமார் 72,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டம் உதகையில் வருகிற 12ம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான பேருக்கு வேலைகள் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். அதனால் இதன் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.