Infosys, TCS, Wipro, HCL நிறுவனங்களில் 1.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – வெளியான தகவல்!
உலகெங்கிலும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்து வரும் சமயத்தில் அவற்றை பூர்த்தி செய்வதற்காக அடுத்த 2021-22 ஆம் நிதியாண்டில் 1.20 லட்சம் புதிய ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாக Infosys, TCS, Wipro, HCL நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
புதிய ஊழியர்கள்:
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் அதற்குண்டான சேவைகளை வழங்க Infosys, TCS, Wipro, HCL உள்ளிட்ட தொழில்துறை நிறுவனங்கள் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்களை பணியமர்த்துவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், HCL டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புதியவர்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
முன்னதாக கொரோனா தொற்று நோய் காலத்தில் பெரும்பாலான IT சேவை நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை நிறுத்தி வைத்தது. அதே நேரத்தில் இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் 4.6 மில்லியன் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களில், அதாவது நான்கில் ஒரு பங்கைக் கொண்ட Infosys, TCS, Wipro, HCL உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் ஜூன் முதல் காலாண்டில் மட்டும் 48,500 பேரை வேலைக்கு அமர்த்தியது.
TN Job “FB Group” Join Now
இவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பை முடித்த புதியவர்கள் ஆவர். குறிப்பாக இந்நிறுவனங்கள் மூத்த திறமையாளர்களை பணியமர்த்துவதை சற்றே நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையில் TCS நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் 20,400 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதை தொடர்ந்து அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தை பொருத்தளவு 8,200 க்கும் மேற்பட்ட பணியாளர்களையும், விப்ரோ நிறுவனம் 12,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களையும், HCL டெக்னாலஜிஸ் ஜூன் முதல் காலாண்டில் 7,500 பேரை வேலையில் அமர்த்தியுள்ளது. கூடுதலாக, வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறமைக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக இவ்வகை IT நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களை மேம்படுத்துவதற்கும், மீளமைப்பதற்கும் முயற்சி செய்து வருகின்றன.