Post Office சேமிப்பு திட்டம் – 5 வருடங்களில் ரூ.1,94,746 லட்சம் வட்டித்தொகை! முழு விபரம் இதோ!
இந்திய அஞ்சல் துறையின் NSC திட்டத்தில் 6.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இதில் 5 வருடங்களுக்கு பிறகு ரூ.1,94,746 லட்சம் ரூபாய் வட்டியை வருமானமாக வழங்குகிறது. இத்திட்டம் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
NSC திட்டம்:
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பல்வேறு சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வங்கிகளை விட அதிக லாபம் அளிக்க கூடிய வகையில் வட்டியும் அளிக்கப்படுவதால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். வருங்கால வைப்பு நிதி, கிராம சுரக்ஷா யோஜனா, செல்வ மகள் சேமிப்பு, மாதாந்திர வருமான திட்டம் போன்றவைகள் மக்களுக்கு அதிக லாபத்தை அளிக்கிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – குஷியில் பணியாளர்கள்!
அதனால் அஞ்சலகங்களில் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் அஞ்சலக திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நல்ல வருமானத்தை ஈட்டக்கூடிய பல திட்டங்களை அஞ்சலக சேமிப்பு கொண்டுள்ளது. மற்ற திட்டங்களை தொடர்ந்து அஞ்சலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் என்எஸ்சி டெபாசிட்டுகள் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
NSC திட்டம் தற்போது 6.8 சதவீத வட்டி விகிதம் வழங்கபடுகிறது. அஞ்சல் அலுவலக திட்டத்தின் விதிகளின்படி, ஆண்டு அடிப்படையில் வட்டி கூடுகிறது. முதிர்வு காலம் முடிந்த பிறகு, அதாவது ஐந்து வருடங்களுக்கு பிறகு செலுத்தப்படும். அதனை தொடர்ந்து NSC திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தின் படி, ரூ.1000 முதலீடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1389.49 ஆக உயரும். ரூ.5 லட்சம் முதலீடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்தில் ரூ.6,94,746 ஆக 5 வருட காலப்பகுதியில் உங்களுக்கு ரூ.1,94,746 லட்சத்தை வட்டியை வருமானமாக கிடைக்கும்.